பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். சமீபகாலமாக தனது உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது திரையுலகை சார்ந்த நண்பர்கள் அவரை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி 31ம் தேதியான இன்று விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியரின் 33வது திருமண நாள். இன்றைய தினம் அவர்களை நேரில் சந்தித்து திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, வெற்றி , செந்தூரப்பாண்டி உட்பட பல படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.