ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

போக்கிரி படத்தில் நடித்தபோது விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அவரிடத்தில் பேச்சு வார்த்தையே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சமீபகாலமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், போக்கிரி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதன் காரணமாக அப்போதில் இருந்து நானும், விஜய்யும் பேசிக் கொள்வதில்லை.
அவர் நடித்த படங்களையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் மீண்டும் விஜய்யுடன் பேசுவதற்கு நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவர் என்னுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். காரணம் அவர் தனது தாய் தந்தையர் இடத்திலேயே பேசாமல் இருக்கிறார். அமெரிக்கா வரை அந்த செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் முதலில் விஜய் தனது அப்பா அம்மாவுடன் சமரசமாகட்டும். மேலும் எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு இடைவெளிக்கு பிறகு அவர் என்னுடன் மீண்டும் பேச தயாராக இருப்பாரா என்று தெரியவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.




