மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
போக்கிரி படத்தில் நடித்தபோது விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அவரிடத்தில் பேச்சு வார்த்தையே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சமீபகாலமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், போக்கிரி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதன் காரணமாக அப்போதில் இருந்து நானும், விஜய்யும் பேசிக் கொள்வதில்லை.
அவர் நடித்த படங்களையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் மீண்டும் விஜய்யுடன் பேசுவதற்கு நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவர் என்னுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். காரணம் அவர் தனது தாய் தந்தையர் இடத்திலேயே பேசாமல் இருக்கிறார். அமெரிக்கா வரை அந்த செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் முதலில் விஜய் தனது அப்பா அம்மாவுடன் சமரசமாகட்டும். மேலும் எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு இடைவெளிக்கு பிறகு அவர் என்னுடன் மீண்டும் பேச தயாராக இருப்பாரா என்று தெரியவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.