அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான அபிநயா தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்றார். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ம் அறிவு, வீரம், தனியொருவன், குற்றம் 23, விழித்திரு உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் முதன் முறையாக 'குற்றம் புரிந்தால்' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார். ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார், கே.எஸ்.மனோஜ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் டிஸ்னி கூறியதாவது: மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் சட்டத்தை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன். பழிவாங்கத் துடிக்கும் ஹீரோவை விரட்டும் போலீஸ் அதிகாரியாக அபிநயா நடிக்கிறார், என்கிறார்.