சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தற்போது அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை தொடர்ந்து அவரது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைய இருக்கும் ஐம்பதாவது படத்தை அவரே இயக்குகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கேங்ஸ்டர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட இயக்குனரான மித்ரன் ஜவஹரும் இணைந்துள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆம்.. இந்த படத்தின் கதை விவாதத்தில் தான் தனுசுடன் இணைந்து பணியாற்றுகிறாராம் மித்ரன் ஜவஹர். தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதைத்தொடர்ந்து அவரை வைத்து குட்டி, உத்தமபுத்திரன் என அடுத்தடுத்த படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனுஷுடன் நான்காவது முறையாக இணைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இவர் தனுஷுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.