20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு கண்ணூர் ஸ்குவாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வழக்கம் போல இந்த படத்தின் கதையும் மம்முட்டிக்கு ரொம்பவே பிடித்து போனதால் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி சார்பில் தானே இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் இதன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகாத நிலையில் தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் டைட்டில் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் மம்முட்டி.