'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு கண்ணூர் ஸ்குவாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வழக்கம் போல இந்த படத்தின் கதையும் மம்முட்டிக்கு ரொம்பவே பிடித்து போனதால் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி சார்பில் தானே இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் இதன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகாத நிலையில் தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் டைட்டில் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் மம்முட்டி.