'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஒத்த செருப்பு சைஸ்-7, இரவின் நிழல் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்று படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ள பார்த்திபன், அந்த படங்களின் தலைப்பையும் சமீபத்தில் டுவிட்டரில் அறிவித்திருந்தார். அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் இறந்து விட்டதாக ஒரு யூடியூப் சேனலில் செய்தி வெளியானதை அடுத்து அந்த செய்திக்கு நறுக்கென்று ஒரு பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன். அந்த பதிவில், 'நொடியில் மரணம் அடைவதும் மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதின் காரணம் புரியவில்லை. நெகட்டிவிட்டிஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம். மக்களுக்கு பரப்புவோம்' என ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.