அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஒத்த செருப்பு சைஸ்-7, இரவின் நிழல் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்று படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ள பார்த்திபன், அந்த படங்களின் தலைப்பையும் சமீபத்தில் டுவிட்டரில் அறிவித்திருந்தார். அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் இறந்து விட்டதாக ஒரு யூடியூப் சேனலில் செய்தி வெளியானதை அடுத்து அந்த செய்திக்கு நறுக்கென்று ஒரு பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன். அந்த பதிவில், 'நொடியில் மரணம் அடைவதும் மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதின் காரணம் புரியவில்லை. நெகட்டிவிட்டிஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம். மக்களுக்கு பரப்புவோம்' என ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.