பிளாஷ்பேக்: வெற்றி பெற்ற “வேலைக்காரி”யும் வீழ்ச்சி அடைந்த “விஜயகுமாரி”யும் | நடிகையுடன் திருமணமா? தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின் முத்து | திட்டினால் திட்டட்டும் - ஷகிலாவின் சர்ச்சை பேச்சு | காதல் பிரிவில் தமன்னா - விஜய் வர்மா | சாகும் வரை நான் 'சீதா' தான் - 'ராமாயண்' தீபிகா | 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறந்த நடிகை நயன்தாரா | போதைப்பொருளாக மாறிய குளுக்கோஸ் ; படப்பிடிப்பில் அவதிப்பட்ட வில்லன் டீம் | மோகன்லாலுடன் நடிப்பதற்காகவே கிளம்பி வந்த ஒடிசா இளைஞர் ; லட்சியம் நிறைவேறியது | பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி | கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சாத்ரிவாலி' என்ற படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா பற்றியும் பேசினார்.
“இந்தியன் 2' படத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமான ஒன்று. கமல்ஹாசன் சார் அவருக்குள் ஒரு பல்கலைக்கழகத்தையே வைத்துள்ளார். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமானது. கமல் சார், அமித் சார் ஆகியோர் பல்கலைக்கழகங்கள். அவர்கள் தான் சினிமா. இந்திய சினிமா அவர்களைச் சார்ந்தது. 100 வருட இந்திய சினிமாவில் அவர்கள் 60 வருடங்களாக இருக்கிறார்கள். அது மிகவும் சாதனையான விஷயம்.
குறுக்கு வழியில் வெற்றி கிடைக்காது என நம்மை உத்வேகப்படுத்தியவர்கள். நாம் செய்யும் வேலையில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களைப் போன்ற சாதனைகளைச் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2, அயலான்' இரண்டு படங்களிலும் தன்னுடைய வசனப் பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாடல்களில் மட்டும் இன்னும் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.