புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சாத்ரிவாலி' என்ற படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா பற்றியும் பேசினார்.
“இந்தியன் 2' படத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமான ஒன்று. கமல்ஹாசன் சார் அவருக்குள் ஒரு பல்கலைக்கழகத்தையே வைத்துள்ளார். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமானது. கமல் சார், அமித் சார் ஆகியோர் பல்கலைக்கழகங்கள். அவர்கள் தான் சினிமா. இந்திய சினிமா அவர்களைச் சார்ந்தது. 100 வருட இந்திய சினிமாவில் அவர்கள் 60 வருடங்களாக இருக்கிறார்கள். அது மிகவும் சாதனையான விஷயம்.
குறுக்கு வழியில் வெற்றி கிடைக்காது என நம்மை உத்வேகப்படுத்தியவர்கள். நாம் செய்யும் வேலையில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களைப் போன்ற சாதனைகளைச் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2, அயலான்' இரண்டு படங்களிலும் தன்னுடைய வசனப் பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாடல்களில் மட்டும் இன்னும் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.