இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இயக்குனர் முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினியை வைத்து 2020ல் தர்பார் படத்தை இயக்கினார். இந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் விஜய் மறுத்துவிட்டார். இதன்பின் அவரின் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில நடிகர்களுடன் இணைவதாக செய்திகள் மட்டுமே வந்தன.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்க உள்ளாராம். ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் வந்தபோதிலும் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் ‛அயலான்' படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்து மாவீரன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பவர் அதன்பின் முருகதாஸ் படத்தில் இணைய உள்ளாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகிறது.