இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விஜய்சேதுபதி படிக்கும் முதல் வெப் தொடர் பார்சி. இதனை பேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ், டீகே இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். விஜய்சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராஷி கண்ணா, கேகே மேனன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த தொடரில விஜய்சேதுபதி துணிச்சலும், நேர்மையும் மிக்க உயர்போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் தலைமையிலான கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இதன் கதை. 8 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.
இதுகுறித்து விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாகித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது. என்றார்.