தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'துணிவு' படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார். பட வெளியீட்டிற்குப் பின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் இரா.சரவணனுடன் சபரிமலை சென்றுள்ளார். சபரிமலைக்குச் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட வீடியோவையும் சரவணன் பகிர்ந்துள்ளார். அங்கு ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் செய்துள்ளார்.
அஜித்தின் அடுத்த படமான அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அவரும் தற்போது சபரிமலை சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட விக்னேஷ் சிவன் எரிமேலி சாலையில் உள்ள வழிப் பலகை முன்பாக நின்று கொண்டுள்ள புகைப்படத்தைப் பதிவிட்டு, “சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னைக் காண ஆவலுடன் வருகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலாமவர் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கவும், இரண்டாமவர் அடுத்த வெற்றிக்காகவும் ஐயப்பனை வழிபட சென்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.