இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் கடனட வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
மரகதமணியின் இசையில் உருவான இந்த பாடலுக்கு ராம்சரணும் ஜூனியர் என்டிஆரும் ஹூக் ஸ்டெப்ஸ் முறையில் அதிவிரைவு நடனம் ஆடியிருந்தார்கள். இந்த நடனத்தை ஹாலிவுட்டில் உள்ள சில நடிகர்களும் பல கிரிக்கெட் வீரர்களும் கூட ஆட முயற்சித்து அதை வீடியோக்களாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்கள் என்பதும் ஆச்சர்யமான ஒன்று..
இந்த நிலையில் இந்த பாடலுக்கு கோல்டன் குளோப் குரூப் விருது கிடைத்ததை தொடர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும் ராம்சரண் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதும் கிடைத்துவிட்டால் இந்த நாட்டுக்கூத்து பாடலுக்கு தொடர்ந்து 17 முறை நடனமாட தயாராக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எதற்காக 17 முறை என்று அவர் குறிப்பிடுகிறார் என்றால், இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட 100 விதமான வித்தியாசமான நடன அசைவுகள் முயற்சித்து பார்க்கப்பட்டன. அதில் தற்போது பாடலில் இடம்பெற்றுள்ள அந்த நடன அசைவுகளுக்காக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் 17 முறை ரிகர்சல் எடுத்துக்கொண்ட பின்னரே அந்த காட்சி படமாக்கப்பட்டது. அதை குறிப்பிடும் விதமாகவே மீண்டும் 17 முறை தான் நடனமாட தயார் என்று கூறியுள்ளார் ராம்சரண்.