'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் கதாநாயகிகள் ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் வேளையில், நடிகை கங்கனா ரனாவத் வரலாற்று கதைகளிலும் வித்தியாசமான சமூக கதைகள் மற்றும் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் டைரக்ஷனிலும் இறங்கி மணிகர்ணிகா என்கிற படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் எமர்ஜென்சி என்கிற படத்தில் இந்திரா வேடத்தில் நடிப்பதுடன் இந்த படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இதில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கங்கனாவின் தலைவி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்து வருகிறார். இந்தப்படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது.
இதுகுறித்து தற்போது கங்கனா கூறும்போது, “இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அருமையான பாடல்களை தந்துள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றது. ஆனால் நிறைய பேர் இந்த எமர்ஜென்சி படத்திற்கு பாடல்களே தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள். அது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை. நான் பாடல்களை ரொம்பவே விரும்புபவள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய படத்திற்கு பத்து நிமிட நீளமான பாடலுடன் கூடிய இன்டர்வல் பிளாக் இருந்தால் அதிகம் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் கங்கனா.