'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 13 கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருகிறார். சூர்யாவுடன் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் இணைந்து நடித்து வரும் இந்த சண்டை காட்சி ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் இந்த சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 வது படத்தின் முதல் பாகம் முடிவடைந்து ரிலீஸ் ஆனதும், இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்றும் படக் குழுவில் தெரிவிக்கிறார்கள்.