30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் | அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்' | 75, 50, 25 : ரஜினிகாந்த் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாட்டம் | ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா |

பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக 86 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கடந்தவார எவிக்சனில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார். 4 முறை கேப்டனாகவும், கேம்களில் சிறப்பாகவும் விளையாடி வந்த மணிகண்டன், இந்த வாரம் நடைபெற்று வரும் 'டிக்கெட் டூ பினாலே' டாஸ்க்கிலும் நிச்சயம் ஜெயித்து பைனல் வரை செல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் பயணம் மறக்க முடியாதது. என்றும் என் நினைவில் இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழு, ஸ்டார் விஜய், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது விலைமதிப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த ரசிகர்களுக்கும் நன்றி. அவர்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்திருக்கிறது. அதிக உயரத்தை அடைய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்' என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டனின் எதிர்காலம் சிறப்பாக அமைய ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.