ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக 86 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கடந்தவார எவிக்சனில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார். 4 முறை கேப்டனாகவும், கேம்களில் சிறப்பாகவும் விளையாடி வந்த மணிகண்டன், இந்த வாரம் நடைபெற்று வரும் 'டிக்கெட் டூ பினாலே' டாஸ்க்கிலும் நிச்சயம் ஜெயித்து பைனல் வரை செல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் பயணம் மறக்க முடியாதது. என்றும் என் நினைவில் இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழு, ஸ்டார் விஜய், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது விலைமதிப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த ரசிகர்களுக்கும் நன்றி. அவர்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்திருக்கிறது. அதிக உயரத்தை அடைய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்' என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டனின் எதிர்காலம் சிறப்பாக அமைய ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.