லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனகூடு திருவிழா நடக்கும். இதில் இந்தியா முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள். 466ம் ஆண்டு சந்தனகூடு திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு வைபவம் நடந்தது.
சந்தனகூடு விழாவில் கலந்து கொள்ள வந்த ஏ.ஆர்.ரஹ்மான் காரில் நாகூர் சென்றார். மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் தர்காவுக்கு செல்ல முடியவில்லை. அதனால் ஒரு ஆட்டோவில் ஏறி தர்காவுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து மற்றொரு ஆட்டோவில் அவரது பாதுகாவலர்களும், போலீசாரும் சென்றனர்.
தர்காவுக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ரஹ்மானை பார்த்து பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். கூட்டம் கூடுவதற்குள் அவரை தர்காவுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வழிபாடு செய்து விட்டு திரும்பினார்.