‛லவ் ஓ லவ்' படப்பிடிப்பு நிறைவு | 'பெத்தி'யில் நடனமாட ஸ்ருதிஹாசனின் சம்பளம் எவ்வளவு | ‛துருவ நட்சத்திரம்' : ஜூன் 15க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி | சர்ச்சையை கிளப்பிய 'டிஎன்-2026' முதல் இந்த வார ஓடிடி ரிலீஸ் வெளியீடு...! | புதுப்பிக்கப்பட்ட 'மூன்றாம் பிறை': மே 1ல் ஓடிடியில் வெளியீடு | மோகன்லாலிடம் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்கள் : சிலாகிக்கும் எஸ்தர் அனில் | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மோதும் 'சத்யவான் சாவித்ரி' | பிளாஷ்பேக் : தவறான வாழ்க்கையால் சினிமாவை இழந்த மாதுரி | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர தயாரிப்பாளர் | தேர்தல் முடிவிற்கு பிறகு பேச்சுவார்த்தை : நடிகர் சங்கம் சம்மதம் |

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து மணிரத்னம், பா. ரஞ்சித். எச்.வினோத், மகேஷ் நாராயணன், லோகேஷ் கனகராஜ் என பலரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவார் என்றும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




