பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து மணிரத்னம், பா. ரஞ்சித். எச்.வினோத், மகேஷ் நாராயணன், லோகேஷ் கனகராஜ் என பலரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவார் என்றும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.