பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! |

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படம் நான்கு பாகங்கள் வரை உருவாக வாய்ப்பு இருப்பதாக அப்படத்திற்கு கதை எழுதி வரும் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் சில தினங்களுக்கு ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் கமல்ஹாசனும் ராஜமவுலியும் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து மணிரத்னம், பா. ரஞ்சித். எச்.வினோத், மகேஷ் நாராயணன், லோகேஷ் கனகராஜ் என பலரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் கமல் நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குவார் என்றும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




