என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் என இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் மற்றும் மலையாளத்தில் கிறிஸ்டி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல்கள், கடற்கரை என புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட மாளவிகா மோகனன் ஹிமாலயா பக்கம் சென்று அமைதியாக தனது புத்தாண்டு தினத்தின் முதல் நாளை கழித்திருக்கிறார்.
மலைப்பகுதியில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தன்னுடைய சில போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் புத்தாண்டு பற்றி அவர் கூறும்போது, “இந்த வருடத்தின் முதல் நாள் அவ்வளவு அழகானதாக இருந்தது. இங்கு என்னைச் சுற்றிலும் மலைகளும் இளஞ்சிவப்பு நிற பூக்களுமாக இந்த நாளை ரொம்பவே இனிமையாக்கி விட்டன. கடந்தாண்டு எனக்கு மிகவும் நல்லபடியாகவே கடந்து சென்றதாக நான் உணர்கிறேன். இந்தாண்டும் அதே போல நிறைய மகிழ்ச்சி, அன்பு, முத்தங்கள் நிறைந்ததாக உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.