ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை கடைசியாக இயக்கிய செல்வராகவன், சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பல வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்'' என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவனின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பின. தனது தம்பியான நடிகர் தனுஷ் மனைவியை விவாகரத்து செய்ததை போல, இவரும் தனது மனைவி கீதாஞ்சலியை பிரிகிறாரா என பல்வேறு யூகங்கை கிளப்பியது. இந்த நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவி கீதாஞ்சலியுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பதிவிட்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் தனது முதல் மனைவியான நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.