நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்து தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதிமுக மற்றும் பா.ஜ., குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து வந்த சித்தார்த், திமுக ஆட்சி வந்ததும் அரசை குற்றம்சாட்டுவது குறைந்துள்ளது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தனது பெற்றோரை ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதாவது: கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையம் வந்த வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.