பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நேரடி சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜெயசுதா மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளனர். அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனாலும் கங்கனா 10 படங்களுக்குள் மட்டுமே நடித்து இந்த விருதை பெற்று இருக்கிறார். ஆனால் என்னை போன்ற பலர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறோம்.
40 படங்களுக்கு மேல் இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை. தென்னிந்திய நடிகைகளை அரசு அங்கீகரிக்காமல் அரசு புறக்கணித்து வருவது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஜெயசுதா கூறியுள்ளார்.
தமிழில் 1970களில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.