அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' |

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை விழாவிற்கு மாவட்ட வாரியாக விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். என்றாலும் நுழைவுச்சீட்டு இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் முன்பு கூடினார்கள்.
அதையடுத்து நுழைவு வாயில் கதவுகள் திறக்கப்பட்ட போது போலீசார் நுழைவு சீட்டை ரசிகர்களிடத்தில் கேட்டார்கள். அப்போது நுழைவுச்சீட்டு இல்லாத ரசிகர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டுவிட்டு அரங்கத்திற்குள் ஓடினார்கள். இந்த தள்ளு முள்ளுவில் சில ரசிகர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று வாரிசு இசைவிழா நடப்பதற்கு முன்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விஜய் மக்கள் மன்றத்திலிருந்து ரசிகர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் பல ரசிகர்கள் அந்த பாஸை 4000 முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.




