ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை விழாவிற்கு மாவட்ட வாரியாக விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். என்றாலும் நுழைவுச்சீட்டு இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கத்தின் முன்பு கூடினார்கள்.
அதையடுத்து நுழைவு வாயில் கதவுகள் திறக்கப்பட்ட போது போலீசார் நுழைவு சீட்டை ரசிகர்களிடத்தில் கேட்டார்கள். அப்போது நுழைவுச்சீட்டு இல்லாத ரசிகர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டுவிட்டு அரங்கத்திற்குள் ஓடினார்கள். இந்த தள்ளு முள்ளுவில் சில ரசிகர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று வாரிசு இசைவிழா நடப்பதற்கு முன்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விஜய் மக்கள் மன்றத்திலிருந்து ரசிகர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் பல ரசிகர்கள் அந்த பாஸை 4000 முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.