ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசனுக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் துணிவு படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இருக்க இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வினோத். அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.