ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசனுக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் துணிவு படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இருக்க இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வினோத். அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.