திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் படையப்பாவுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதில் ஒரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், இன்னொரு படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காததால் ரஜினியின் 171வது படத்தை கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.