ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் படையப்பாவுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதில் ஒரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், இன்னொரு படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காததால் ரஜினியின் 171வது படத்தை கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.