25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சுவாரியர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அசுரன் படம் மூலமாக தமிழிலும் அடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து தற்போது அஜித் ஜோடியாக துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. மலையாளத்தில் தற்போது ஆயிசா என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அதேசமயம் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் மஞ்சுவாரியர். சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகர் அஜித் உள்ளிட்ட குழுவினருடன் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் பைக் பயணம் மேற்கொண்டார் மஞ்சுவாரியர்.
இந்த நிலையில் தற்போது பெத்லகேம் நகரில் முகாமிட்டுள்ள மஞ்சுவாரியர், அங்கு உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ததுடன் பெத்லகேம் தெருக்களில் ஜாலியாக சுற்றி திரிந்ததை ஒரு வீடியோவாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு குழந்தை மனம் கொண்ட சிறு பெண்ணாக மாறி, மஞ்சுவாரியர் இந்த பயணத்தை என்ஜாய் செய்திருப்பது அந்த வீடியோவில் பளிச்சென தெரிகிறது.