இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை தவம் செய்தால் இது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இன்று(டிச., 12) குடும்பத்துடன் வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோ பூஜை, கஜ பூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தியும் சுவாமி தரிசனம் செய்தார். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.