ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சமி மேனன் மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டில் வெளிவந்துவெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. அப்படத்திற்காக பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், விவேக் ஹர்ஷன் சிறந்த எடிட்டிருக்கான தேசிய விருதையும் பெற்றார்கள்.
அப்படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய “இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மஹான்” ஆகிய படங்களை இயக்கினார். இருப்பினும் 'ஜிகர்தண்டா' அளவிற்கான பேரும், பாராட்டுக்களும் அந்தப் படங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் 'ஜிகர்தண்டா'வைக் கையிலெடுத்து இரண்டாம் பாகமாக எடுக்காமல் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என வித்தியாசமான பெயருடன் படத்தை ஆரம்பித்துள்ளார்.
அதற்கான அறிவிப்பு நேற்று 3 நிமிட டீசருடன் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்கிறார்கள். இரும்புப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸைப் பிடிப்பதற்காக போலீஸ் படையுடன் எஸ்ஜே சூர்யா அவருக்கெதிராக களமிறங்கும் காட்சி மட்டுமே அந்த 3 நிமிட டீசரில் இடம் பிடித்துள்ளது. 'ரெட்ரோ' டைப் படமாக இப்படம் உருவாகலாம் என டீசரைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. டீசரின் முடிவில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் மண்ணுக்குள்ளிருந்து 'கேமரா'வை எடுத்து சுடுவதுடன் டீசர் முடிவுக்கு வருகிறது.
'ஜிகர்தண்டா' போல சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கதாநாயகன் தான் இந்தப் படத்திலும் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த டீசர் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.