அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சமி மேனன் மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டில் வெளிவந்துவெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. அப்படத்திற்காக பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், விவேக் ஹர்ஷன் சிறந்த எடிட்டிருக்கான தேசிய விருதையும் பெற்றார்கள்.
அப்படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய “இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மஹான்” ஆகிய படங்களை இயக்கினார். இருப்பினும் 'ஜிகர்தண்டா' அளவிற்கான பேரும், பாராட்டுக்களும் அந்தப் படங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் 'ஜிகர்தண்டா'வைக் கையிலெடுத்து இரண்டாம் பாகமாக எடுக்காமல் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என வித்தியாசமான பெயருடன் படத்தை ஆரம்பித்துள்ளார்.
அதற்கான அறிவிப்பு நேற்று 3 நிமிட டீசருடன் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்கிறார்கள். இரும்புப் பட்டறை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸைப் பிடிப்பதற்காக போலீஸ் படையுடன் எஸ்ஜே சூர்யா அவருக்கெதிராக களமிறங்கும் காட்சி மட்டுமே அந்த 3 நிமிட டீசரில் இடம் பிடித்துள்ளது. 'ரெட்ரோ' டைப் படமாக இப்படம் உருவாகலாம் என டீசரைப் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. டீசரின் முடிவில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் மண்ணுக்குள்ளிருந்து 'கேமரா'வை எடுத்து சுடுவதுடன் டீசர் முடிவுக்கு வருகிறது.
'ஜிகர்தண்டா' போல சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கதாநாயகன் தான் இந்தப் படத்திலும் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த டீசர் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.