Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத்

04 டிச, 2022 - 15:17 IST
எழுத்தின் அளவு:
H-Vinoth-shares-about-Ajithkumar's-character-on-Thunivu

இயக்குனர் சிவாவுக்கு பிறகு, அஜித் நடிக்கும் படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனர் ஆகவே மாறிவிட்டவர் எச்.வினோத். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரித்துள்ளார். மஞ்சுவாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படம் குறித்து சில தகவல்களை மனம் திறந்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் வினோத்.

‛‛இந்த படத்தை முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கவே நான் விரும்பினேன், அதற்கேற்ப கதையையும் வடிவமைத்தேன். ஆனால் அஜித் சார் இந்த கதையை கேட்டு வியந்து நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறினார், உடனே நான் படத்தின் தரத்தை உயர்த்திவிட்டேன்.''

“இந்த படம் ஏதோ பேங்க் கொள்ளை பற்றியது என்றும் ஆக்சன் த்ரில்லர் என்றும் சோசியல் மீடியாவில் பலரும் தங்களுக்குத் தோன்றிய கதைகளை கூறி வருகிறார்கள். இந்த படத்திற்காக நாங்கள் பிரத்யேகமாக உருவாக்கிய ஒரு பேங்க் செட்டு தான் இப்படிப்பட்ட யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக இந்த படம் இந்த ஜானரில் தான் இருக்கும் என தீர்மானிக்க முடியாதபடி இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா, இரட்டை வேடங்களில் நடித்துள்ளாரா என்கிற கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்ட போது, “நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்விக்கு நான் ஆமாம் என்று பதில் சொன்னால், உடனே இது இன்னொரு மங்காத்தாவா என அவர்களாகவே வேறுவித கற்பனைக்கு தாவி விடுவார்கள். அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்பது படம் வெளியாகும் வரை மர்மமாகவே இருக்க விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் வினோத்.

கமல், தனுஷ் ஆகியோருக்கு கதை சொல்லியிருப்பதாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு எச் வினோத், "படம் ரிலீசுக்கு முன்னர் இது போன்ற பேச்சுக்கள் வருவது இயல்பு. ஆனால் யோகி பாபுவுக்கு தற்போது ஒரு கதை கூறியுள்ளேன். ஆனால் உறுதி செய்யப்படவில்லை. ஒரு அப்பாவி திருடன்,போலீஸ்காரருக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைக்களம் இது. யோகி பாபு தான் இதில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பார்" என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னைகேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ... கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Murali - ,
04 டிச, 2022 - 19:42 Report Abuse
Murali kathai irundhal sari..ajith Sir nalla kadhai la nadichu romba gap agiduchu..waiting from some good movies..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in