ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் உலகமெங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தியாவில் இந்த படத்திற்கு என தனி ரசிகர் கூட்டம் எல்லா மொழிகளிலும் உள்ளது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அவதார் - வே ஆப் வாட்டர் என்கிற பெயரில் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இந்த படத்தை திரையிடுவது தொடர்பாக இந்தப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு தொகை தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.
விநியோகஸ்தர்கள் முதல் இரண்டு வாரங்களில் இந்த படத்திற்கு வசூலாகும் தொகையில் வழக்கமாக தாங்கள் பெற்று வரும் பங்கு தொகையை விட 5 சதவீதம் கூடுதலாக கேட்டு நிர்ப்பந்தித்தனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ வழக்கமாக கொடுக்கப்பட்டு வரும் பங்கை மட்டுமே கொடுக்க முடியும் என்றும் மேலும் இந்த பிரச்னை நீடித்தால் அவதார்-2 படத்தை கேரளாவில் திரையிட மாட்டோம் என்றும் போர்க்கொடி தூக்கினார்கள்.
இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விநியோகஸ்தர்கள் ஒருபடி கீழே இறங்கிவந்து வழக்கமான பங்குத்தொகை பெறுவதற்கு சம்மதித்து விட்டதால் தற்போது இந்த பிரச்னை சுமூக முடிவுக்கு வந்துள்ளது.