'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் |

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கடுவா. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவான இந்தப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி உள்ளனர். இந்த படம் நிஜத்தில் வாழ்ந்த கடுவாக்குன்னால் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த நிலையில் இந்த வெற்றி விழாவின்போது பேசிய பிரித்விராஜ், இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்றும், அது இந்த படத்தில் சீக்வல் ஆக இல்லாமல் ப்ரீக்வல் ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதே சமயம் இந்த இரண்டாம் பாகத்தில் கடுவாக்குன்னல் குருவச்சனின் தந்தையான கொருத்து மாப்பிள்ள கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், மம்முட்டி அல்லது சுரேஷ்கோபி இவர்களில் யாராவது ஒருவர் சம்மதிக்க வேண்டும்.. அந்த கம்பீரமான கதாபாத்திரத்திற்கு இதில் யாரவது ஒருவர் இருந்தால் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மேற்கொண்டு நகரும் என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.. ரசிகர்கள் பலரும் மம்முட்டி அல்லது சுரேஷ்கோபி இருவரில் ஒருவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.