என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கான பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக சர்ச்சை எழுந்தது. அதைப் படமாக்கச் சென்ற செய்தியாளர்களை படக்குழுவினர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுதான் 'வாரிசு' படத்தின் ஆந்திரா, தெலங்கானா சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. அடுத்து இந்த சர்ச்சையை படக்குழுவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.