20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கான பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் அனுமதி இல்லாமல் 5 யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக சர்ச்சை எழுந்தது. அதைப் படமாக்கச் சென்ற செய்தியாளர்களை படக்குழுவினர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுதான் 'வாரிசு' படத்தின் ஆந்திரா, தெலங்கானா சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. அடுத்து இந்த சர்ச்சையை படக்குழுவே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.