ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
‛பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து தனுஷை வைத்து ‛கர்ணன்' படத்தை கொடுத்தார். தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்து வாழை என்ற படத்தை இயக்குகிறார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இந்த படத்தை மாரி செல்வராஜும் இணைந்து தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 21) ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் துவங்கியது. இதை நடிகர் உதயநிதி துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. படத்தில் நான்கு சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.