இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் தட்டத்தின் மறையத்து என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன். தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக டைரக்ஷன் மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் வினீத் சீனிவாசன். மேலும் பாடலாசிரியர் தயாரிப்பாளர் கதாசிரியர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. இவரது படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதுமட்டுமல்ல இவர் படித்தது சென்னை லயோலா கல்லூரியில் தான். தற்போது வசிப்பதும் சென்னையில்தான். தனது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் கேரளா சென்று வரும் வினித் சீனிவாசன், தனது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தையும் சென்னையில் தான் மேற்கொண்டு வருகிறார்.
இந்த வருட துவக்கத்தில் இவர் இயக்கிய ஹிருதயம் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வினீத் சீனிவாசனிடம் நீங்கள் ஏன் துல்கர் சல்மான், பஹத் பாசில் போல தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வினித் சீனிவாசன், “சுதந்திரம்தான் காரணம்.. இப்போது நான் சென்னையில் என்னைப்பற்றி யாரென்றே தெரியாத மக்கள் இருக்கும் பகுதியில் தான் வசிக்கிறேன்.. அதனால் என்னால் சுதந்திரமாக உலாவ முடிகிறது. தமிழில் படம் நடித்து ஒருவேளை அது வெற்றியும் பெற்றுவிட்டால் அதன்பிறகு எனது திரையுலக பயணத்திலும் சரி. வாழ்க்கை பயணத்திலும் சரி.. மாற்றங்கள் வர ஆரம்பித்துவிடும்.. எனக்கு இங்கே இப்போது கிடைக்கும் சுதந்திரம் பறிபோய்விடும். நான் மட்டுமல்ல.. மோகன்லாலின் மகன் பிரணவுக்கு கூட தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதே சுதந்திரம் காரணமாகத்தான் அவரும் தமிழில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.. வேறு ஒன்றும் காரணமில்லை.. தமிழகம் எனக்கு பிடித்து இருப்பதால் தான் சென்னையில் வசிக்கிறேன்.. மாதத்திற்கு நான்கைந்து நாட்கள் மட்டும் கேரளா சென்று வருகிறேன்” என்று கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.