இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
மலையாள திரையுலகில் தட்டத்தின் மறையத்து என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன். தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக டைரக்ஷன் மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் வினீத் சீனிவாசன். மேலும் பாடலாசிரியர் தயாரிப்பாளர் கதாசிரியர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. இவரது படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதுமட்டுமல்ல இவர் படித்தது சென்னை லயோலா கல்லூரியில் தான். தற்போது வசிப்பதும் சென்னையில்தான். தனது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் கேரளா சென்று வரும் வினித் சீனிவாசன், தனது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தையும் சென்னையில் தான் மேற்கொண்டு வருகிறார்.
இந்த வருட துவக்கத்தில் இவர் இயக்கிய ஹிருதயம் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வினீத் சீனிவாசனிடம் நீங்கள் ஏன் துல்கர் சல்மான், பஹத் பாசில் போல தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வினித் சீனிவாசன், “சுதந்திரம்தான் காரணம்.. இப்போது நான் சென்னையில் என்னைப்பற்றி யாரென்றே தெரியாத மக்கள் இருக்கும் பகுதியில் தான் வசிக்கிறேன்.. அதனால் என்னால் சுதந்திரமாக உலாவ முடிகிறது. தமிழில் படம் நடித்து ஒருவேளை அது வெற்றியும் பெற்றுவிட்டால் அதன்பிறகு எனது திரையுலக பயணத்திலும் சரி. வாழ்க்கை பயணத்திலும் சரி.. மாற்றங்கள் வர ஆரம்பித்துவிடும்.. எனக்கு இங்கே இப்போது கிடைக்கும் சுதந்திரம் பறிபோய்விடும். நான் மட்டுமல்ல.. மோகன்லாலின் மகன் பிரணவுக்கு கூட தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதே சுதந்திரம் காரணமாகத்தான் அவரும் தமிழில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.. வேறு ஒன்றும் காரணமில்லை.. தமிழகம் எனக்கு பிடித்து இருப்பதால் தான் சென்னையில் வசிக்கிறேன்.. மாதத்திற்கு நான்கைந்து நாட்கள் மட்டும் கேரளா சென்று வருகிறேன்” என்று கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.