நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? |
2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. வசூலில் புதிய சாதனை படைத்தது இந்த படம். 13 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. 2ம் பாகம் தயாரிக்க மட்டுமே 3 ஆண்டுகள் ஆனது. 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 2ம் பாகத்தை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளியில் 3 மற்றும் 4ம் பாகம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2ம் பாகம் வசூலை குவித்தால் மட்டுமே அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என்று இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜேம்ஸ் கேமரூன் கூறியிருப்பதாவது: நான் இந்தப் படத்தை எழுதியபோது சினிமாவில் இருந்த நிலை வேறு. இப்போது உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தொற்று சினிமாவை பெரிதாக பாதித்தது. ஓடிடி தளங்கள் புதிதாக வந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு முழுமையாக வரத் தொடங்கிவிட்டார்களா என்பது சந்தேகமே.
ஒருவேளை அவதார் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரலாம். ஆனால் எத்தனை பேரை அழைத்து வரும் என்ற நிலை உள்ளது. சந்தை நிலவரமும் அப்படித்தான் உள்ளது. அதனால், அவதார் பட வரிசைகள் மூன்று பாகங்களோடு முடித்துக் கொள்ளும் எண்ணம் உள்ளது. அதுவும் 2ம் பாகத்தின் வசூல் நிலவரத்தை பொறுத்தே இருக்கும்.
3ம் பாகத்தை இயக்கும் பொறுப்பை கூட நம்பிக்கைக்குரிய இயக்குநர் ஒருவரிடத்தில் ஒப்படைக்கும் எண்ணமும் உள்ளது. நான் சுவாரஸ்யம் நிறைந்த கதை கரு ஒன்றை உருவாக்கி வருகிறேன். அதை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்றாலும் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இவ்வாறு ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.