நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

இயக்குனர் ஷங்கர் தனது இத்தனை வருட திரையுலக பயணத்தில் ஒரே நேரத்தில் ஒரு படம் மட்டுமே இயக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்தநிலையில் தற்போது ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தையும், இன்னொருபக்கம் கமலின் இந்தியன்-2 படத்தையும் மாறி மாறி இயக்கிவருகிறார்.
இந்த பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக வேள்பாரி என்கிற நாவலை அவர் படமாக இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த படம் குறித்த ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் தான் கதை எழுதியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுபற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, இயக்குனர் ஷங்கர் வேள்பாரி என்கிற நாவலை படமாக்க உள்ளார். இது குறித்த முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக ஷங்கர் இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இயக்குவதாக அறிவித்ததும் அதன்பிறகு அந்நியன் பட தயாரிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்தே ரன்வீர் சிங்கை இந்த வேள்பாரி படத்தில் ஷங்கர் நடிக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.