20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது திரைப்பட பணிகளிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதுகிறார். சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு அவர்தான் வசனம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயமோகன் எழுதிய 'கைதிகள்' என்ற சிறுகதை 'ரத்தசாட்சி' என்ற பெயரில் சினிமா ஆகியுள்ளது. இப்படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். ஆஹா ஓடிடி தளத்திற்காக அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து ஜெயமோகன் கூறியிருப்பதாவது: இந்த கதையை படமாக்க மணிரத்னம் விரும்பினார். இயக்குனர் வெற்றி மாறன் இந்த கதையின் உரிமையை கேட்டார். ஆனால் இவர்கள் கேட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பு ரபிக் இஸ்மாயில் என்ற இளைஞர் என்னை சந்தித்து இந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை பெற்றுச் சென்று விட்டார். அந்த கதைதான் ரத்தசாட்சி என்ற பெயரில் படமாகி உள்ளது. என்கிறார் ஜெயமோகன்.