தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் |

தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய படங்களில் நடித்துள்ள தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படம் 'சார்'. ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழில் எடுக்கப்படும் இந்தப் படம் தமிழில் 'வாத்தி' என்ற பெயரில் டிசம்பர் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. நாளை இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தனுஷ் எழுதிய 'வா வாத்தி' பாடல் வெளியாக உள்ளது.
'வாத்தி' படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு வெளியான சமயத்திலிருந்து அந்தப் படம் பற்றி தனுஷ் கண்டுகொள்ளவே இல்லை. அவர் நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்', அதற்கு அடுத்து வெளியான 'நானே வருவேன்' ஆகிய படங்களைப் பற்றி மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
'வாத்தி' படம் பற்றிய அப்டேட்கள் தீபாவளி சமயத்தில் வந்த போதும், சில நாட்களுக்கு முன்பு முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வந்த போதும் எதுவுமே பதிவிடாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று ஜிவி பிரகாஷ் உடன் இருக்கும் முதல் சிங்கிள் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டு தன் அப்டேட்டை கொஞ்சம் லேட்டாகப் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து அப்படத்தை தனுஷ் புறக்கணித்து வந்த நிலையில் நேற்று திடீரென டுவீட் செய்ததன் பின்னணித் தகவல் கசிந்துள்ளது. அப்படத்திற்காக தனுஷுக்கு 15 கோடி வரை சம்பள பாக்கி வைத்திருந்தார்களாம். அதில் 10 கோடியைத் தந்துவிட்டதாகவும் மீதித் தொகையை பட வெளியீட்டிற்கு முன்பாக தருவதாக தயாரிப்பு நிறுவனம் சொன்னதால் தனுஷ் 'வாத்தி' புரமோஷனில் இறங்கிவிட்டாராம். 'பாக்கி' வந்ததும் 'வாத்தி'க்கு வாசல் திறந்துவிட்டுள்ளார் தனுஷ்.




