வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
"ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்துக்கு பிறகு ராஜேஷ்.எம். இயக்கும் படம் "ஆல் இன் ஆல் அழகுராஜா". கார்த்தி, காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். கார்த்தி "பிரியாணி" படத்திலும், காஜல் அகர்வால் தெலுங்கு படத்திலும் பிசியாக இருப்பதால் ராஜேஷ் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தற்போது திரைக்கதை அமைப்பை முடித்துவிட்டதால் படப்பிடிப்பு நடத்தும் லொக்கேஷன்களை சென்று பார்த்து வந்திருக்கிறார் ராஜேஷ். படத்தின் முதல் செட்யூல் குற்றாலத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறது.
அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்திக்கிற்கும், சந்தானத்துக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதால் இதில் கார்த்தி, சந்தானம் கூட்டணி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. சந்தானத்தின் வெற்றிகளுக்கு இயக்குனர் ராஜேஷ்தான் காரணம் என்பதால் மனஸ்தாபத்தை மறந்து விட்டு சந்தானம் நடிப்பார் என்று கூறப்படுகிறது. கார்த்திக்கு அடுத்து ஒரு ஹிட் கட்டாயம் தேவை என்பதால் அவரும் எல்லாவற்றையும் மறந்து நடிப்பார் என்கிறார்கள்.