நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் படங்கள் வருவதும், தலைப்பு வைக்கப்படுவதும் புதிதல்ல. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கும் அது நடந்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வந்தியத்தேவன் கேரக்டரை மட்டும் பிரதானமாக கொண்டு வந்தியத்தேவன் என்ற பெயரில் ஒரு படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்தாகவும், அதில் கார்த்தி நடிப்பதாக இருந்ததாகவும் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறியிருந்தார். இப்போது அந்த படத்தை தயாரிக்கும் திட்டத்திலும் அவர் இருக்கிறார்.
இதற்கிடையில் ராணி நந்தினி, பழுவேட்டரையர், அருள்மொழி வர்மன் என்ற பெயர்கள் படத்தின் தலைப்பாக பல சங்கங்களில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் ஒரு நடிகையின் வாக்குமுலம் படத்தை இயக்கிய ராஜ் கிருண்ஷா 'வந்தியத்தேவன் மீது பி.சி.ஆர் வழக்கு' என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
மரப்பாச்சி, ஆண்கள் ஜாக்கிரதை படங்களை தயாரித்த ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் ஒளிப்பதிவு செய்கிறார், பால கணேஷ் இசை அமைக்கிறார். “படத்தின் தலைப்பு வந்தியத்தேவன் என்று இருந்தாலும் இது வந்தியத்தேவனின் கதை அல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவாகும் படம். 26ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா.