உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி . இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி கலந்து கொண்டபோது வீடியோ மூலம் இயக்குனர் செல்வராகவன் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிப்பீர்களா? என்று அவர் கேட்டதற்கு, ஆயிரத்தில் ஒருவன் தந்த வலியே இன்னும் மாறவில்லை. அது ஆறிய பின்னர் யோசிப்போம் என்று பதில் கொடுத்தார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை குறித்து கூறினார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்துதான் உருவாக்கியதாக தெரிவித்தார். அதனால் ஏற்கனவே கார்த்தி இன்னொரு பெயரில் வந்திய தேவன் வேடத்தில் ஏற்கனவே நடித்து விட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.