டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கிறார் கார்த்தி . இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி கலந்து கொண்டபோது வீடியோ மூலம் இயக்குனர் செல்வராகவன் அவரிடத்தில் சில கேள்விகளை கேட்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிப்பீர்களா? என்று அவர் கேட்டதற்கு, ஆயிரத்தில் ஒருவன் தந்த வலியே இன்னும் மாறவில்லை. அது ஆறிய பின்னர் யோசிப்போம் என்று பதில் கொடுத்தார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவனுக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை குறித்து கூறினார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்த முத்து கேரக்டர் வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்துதான் உருவாக்கியதாக தெரிவித்தார். அதனால் ஏற்கனவே கார்த்தி இன்னொரு பெயரில் வந்திய தேவன் வேடத்தில் ஏற்கனவே நடித்து விட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




