ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழில் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் நேரடிப் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.
இப்படத்தின் சில புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் 'லீக்' ஆனது. அதில் அந்தக் கால இளைஞர் தோற்றத்தில் ராம் சரண், அவரது மனைவியாக நடிக்கும் அஞ்சலி ஆகியோர் உள்ள சில புகைப்படங்களும் அடக்கம். அந்தப் புகைப்படங்களை வைத்து அவை படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் ராம் சரண் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
அப்பா கதாபாத்திரத்திற்கு அஞ்சலி ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாகவும் இருக்கலாம். அந்தக் கால தோற்றத்தில் உள்ள ராம் சரண், அஞ்சலி ஆகியோரைப் பார்ப்பதற்கு 'இந்தியன் 2' படத்தில் இடம் பெற்ற கமல்ஹாசன், சுகன்யா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளின் 'கிளாசிக்' டச் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள். 2023ம் ஆண்டில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




