ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் அது குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஷாருக்கான்.
அதில், 'கடந்த 30 நாட்கள் என்ன ஒரு சிறப்பான அனுபவம். தலைவர் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்தார். நயன்தாராவுடன் இணைந்து படம் பார்த்தேன். அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடினேன். விஜய் சேதுபதியுடன் நீண்ட உரையாடல். விஜய் சுவையான உணவு அளித்தார். இயக்குனர் அட்லி மற்றும் பிரியா ஆகியோரின் விருந்தோம்பலுக்கு நன்றி. தற்போது சிக்கன் 65 ரெசிபி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்' என்று பதிவு போட்டு இருக்கிறார் ஷாருக்கான்.
இதையடுத்து அவரது பதிவுக்கு இயக்குனர் அட்லி ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். அதில், 'மிக்க நன்றி சார். நீங்கள் சென்னை வந்தது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் சென்னையில் நடந்த இந்த படப்பிடிப்பு மறக்க முடியாத நிகழ்வு. சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இதன் மூலம் ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன். லவ் யூ சார். விரைவில் உங்களை மும்பையில் சந்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் அட்லி.