'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து திரை உலகை சார்ந்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், ‛‛பொன்னியின் செல்வன் படம் வசீகரிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ஒரு தரமான சரித்திர படம். பிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் மணிரத்னம் நிரூபித்திருக்கிறார். அழகாக காட்சிப்படுத்தி உள்ள ரவி வர்மனுக்கு தலைவணங்குகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இனிமையாக உள்ளது. மூன்று மணி நேரம் சூழ்ச்சிகள் நிறைந்த இந்த கதை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இப்படி ஒரு சிறப்புமிக்க வரலாற்று படத்தை கொடுத்த பிரம்மாண்ட குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.