தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களின் மூலம் திறமையான குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர் நடிகர் கிஷோர் அதன்பிறகு ஹரிதாஸ், போர்க்களம் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கிய கிஷோர், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக (ஆபத்துதவியாக) வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அதேசமயம் கன்னடத்திலும் இவர் நடித்துள்ள கந்தரா என்கிற படம் அதேநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் கிஷோர். இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ள கிஷோர், சந்திரசேகர் பண்டியப்பா என்பவர் இயக்கும் ரெட் காலர் என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கிஷோர் நடிக்கும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட இருக்கின்றன.