சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? |
வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களின் மூலம் திறமையான குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர் நடிகர் கிஷோர் அதன்பிறகு ஹரிதாஸ், போர்க்களம் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கிய கிஷோர், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக (ஆபத்துதவியாக) வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அதேசமயம் கன்னடத்திலும் இவர் நடித்துள்ள கந்தரா என்கிற படம் அதேநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் கிஷோர். இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ள கிஷோர், சந்திரசேகர் பண்டியப்பா என்பவர் இயக்கும் ரெட் காலர் என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கிஷோர் நடிக்கும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட இருக்கின்றன.