மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
இயக்குனர் ஆர். கே .செல்வமணி, நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்ஷு மாலிகா. இவர் ஆதித்ய வர்மா, மகான் படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் நடிக்க இருக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அது குறித்து இயக்குனர் ஆர் .கே .செல்வமணி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய மகள் அன்ஷு மாலிகா மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்று இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் அங்கு தான் இருப்பார். அதனால் அவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. அதன் பிறகு வேண்டுமானால் ஒருவேளை அவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆர்.கே. செல்வமணி.