விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறியதோடு தற்போது பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலுக்கு இவர் ஆடிய நடனம் அனைத்து பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். பாலிவுட்டில் தற்போது அமிதாப்பச்சனுடன் இவர் இணைந்து நடித்துள்ள குட்பை என்கிற படம் வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு படமான மிஷன் மஞ்சு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் திடீரென ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை பரினிதி சோப்ரா சில காரணங்களால் விலகி விட அவருக்கு பதிலாக தற்போது ராஷ்மிகா இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ராஷ்மிகாவுக்கு ஒரே விதமான காலை உணவை சாப்பிட்டு போரடித்து விட்டதாம். இதுகுறித்து நாயகன் ரன்பீர் கபூரிடம் குறைபட்டுக்கொள்ள, அவரோ தனது தனிப்பட்ட சமையல்காரரை வைத்து ராஷ்மிகாவிற்கு ஸ்பெஷலாக உணவு சமைத்துக்கொண்டு வந்து தந்துள்ளார்.
ஆனாலும் அதுவும் படப்பிடிப்பில் கொடுக்கப்படும் சாப்பாடு போலவே இருப்பதைப் பார்த்து முதலில் அதிர்ச்சியான ராஷ்மிகா, பின்னர் அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு அதன் சுவை முற்றிலும் வேறாக, விரும்பி உண்ணக்கூடியதாக இருப்பதை உணர்ந்தாராம். இதுகுறித்து ரன்பீர் கபூரிடம் ராஷ்மிகா கூறும்போது உங்களுக்கு கிடைத்தது போன்று திறமையான சமையல்காரர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று தனது மனக்குறையை வெளிப்படுத்தினாராம்.