டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 7 ஆண்டுகளுக்கு பிறகு மலேஷியாவின் கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். டிஎம்ஒய் கிரியேசன் என்ற நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சி வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28ம் தேதி நடக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் 10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து வெளியிட்டனர். இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை. எனவே இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.




