பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

இசைத் துறையில் உள்ள பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் பாடகர் மலேசிய வாசுதேவனும் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய ஒரே படம் 'நீ சிரித்தால் தீபாவளி'.
இந்த படத்தில் சிவகுமார், ஹரிஷ் குமார், டெய்சி சோனியா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
படத்தில் அம்பிகாபதி, அமராவதி ரேன்ஞ்சுக்கு ஒரு காதல் கதை சொன்னார் வாசுதேவன், ஆனால் படம் தோல்வி அடைந்தது. உருக உருக சொன்ன காதலும், அளவிற்கு அதிகமான பாடல்களும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள். இந்த படத்தின் தோல்வியால் இதன்பிறகு மலேசியா வாசுதேவன் படங்கள் எதையும் இயக்கவில்லை.