22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இசைத் துறையில் உள்ள பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் பாடகர் மலேசிய வாசுதேவனும் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய ஒரே படம் 'நீ சிரித்தால் தீபாவளி'.
இந்த படத்தில் சிவகுமார், ஹரிஷ் குமார், டெய்சி சோனியா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
படத்தில் அம்பிகாபதி, அமராவதி ரேன்ஞ்சுக்கு ஒரு காதல் கதை சொன்னார் வாசுதேவன், ஆனால் படம் தோல்வி அடைந்தது. உருக உருக சொன்ன காதலும், அளவிற்கு அதிகமான பாடல்களும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள். இந்த படத்தின் தோல்வியால் இதன்பிறகு மலேசியா வாசுதேவன் படங்கள் எதையும் இயக்கவில்லை.