‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
இந்திய சினிமாவின் பெரிய ஆளுமை சாந்தாராம். ஹிந்தி மற்றும் மராட்டிய மொழிகளில் பிரமாண்ட படங்களை தயாரித்தார், இயக்கினார். தமிழில் 'சீதா கல்யாணம்' என்ற படத்தை தயாரித்தார். இவர் இயக்கிய பிரமாண்ட ஹிந்திப் படமான 'அப்னா தேஷ்' என்ற படம் 'நம் நாடு' என்ற பெயரில் தமிழில் வெளியானது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில், உருவான படம். சுதந்திரம் அடைந்த பின் இந்தியா எதிர்கொண்ட பிரச்னைகளை இந்தப் படம் பேசியது. அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹன்ஸ் நாயகியாக நடித்தார். உமேஷ் சர்மா, சந்திரசேகர், கேசவ் ராவ் ததே உட்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு புருஷோத்தம் இசை அமைத்தார்.
தமிழ் பதிப்புக்கு ஜி.கோவிந்த ராஜுலு இசை அமைக்க, பாடல்களை ராஜகோபால ஐயர் எழுதினார். 1949ம் ஆண்டு தமிழில் ரிலீஸான இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற இந்த படம், தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்திருந்ததும், வட மாநில மக்களின் வாழ்வியலை கொண்டிருந்ததும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள்.