காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இந்திய சினிமாவின் பெரிய ஆளுமை சாந்தாராம். ஹிந்தி மற்றும் மராட்டிய மொழிகளில் பிரமாண்ட படங்களை தயாரித்தார், இயக்கினார். தமிழில் 'சீதா கல்யாணம்' என்ற படத்தை தயாரித்தார். இவர் இயக்கிய பிரமாண்ட ஹிந்திப் படமான 'அப்னா தேஷ்' என்ற படம் 'நம் நாடு' என்ற பெயரில் தமிழில் வெளியானது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில், உருவான படம். சுதந்திரம் அடைந்த பின் இந்தியா எதிர்கொண்ட பிரச்னைகளை இந்தப் படம் பேசியது. அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹன்ஸ் நாயகியாக நடித்தார். உமேஷ் சர்மா, சந்திரசேகர், கேசவ் ராவ் ததே உட்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு புருஷோத்தம் இசை அமைத்தார்.
தமிழ் பதிப்புக்கு ஜி.கோவிந்த ராஜுலு இசை அமைக்க, பாடல்களை ராஜகோபால ஐயர் எழுதினார். 1949ம் ஆண்டு தமிழில் ரிலீஸான இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற இந்த படம், தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்திருந்ததும், வட மாநில மக்களின் வாழ்வியலை கொண்டிருந்ததும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள்.