சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61 வது படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜித் அல்லாத மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பங்காங்கில் நடைபெற உள்ளது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பைக்கில் லடாக்கில் சுற்று பயணம் செய்து வரும் அஜித்குமார், 17,000 அடி உயரத்தில் இருக்கும் புத்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து தற்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் அஜித் குமார். அவர் அங்கு தரிசனம் செய்யும் காட்சி, நந்தியின் வாயில் இருந்து வரும் தீர்த்த நீரை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.