'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61 வது படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜித் அல்லாத மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் பங்காங்கில் நடைபெற உள்ளது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பைக்கில் லடாக்கில் சுற்று பயணம் செய்து வரும் அஜித்குமார், 17,000 அடி உயரத்தில் இருக்கும் புத்தர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து தற்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் அஜித் குமார். அவர் அங்கு தரிசனம் செய்யும் காட்சி, நந்தியின் வாயில் இருந்து வரும் தீர்த்த நீரை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.