மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் | பாடகர் டி.எம்.எஸ்ஸிற்கு கவுரவம் : அவரது பெயரில் சாலை திறப்பு | மனித உரிமை ஆணையத்தின் பின்னணியில் உருவாகும் படம் | புதுமுகங்கள் உருவாக்கும் 'தலைகவசமும் 4 நண்பர்களும்' | ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை தொடங்கி வைத்தார் ராஜமவுலி | இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி விருது | தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் | டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த மகிழ்ச்சியில் ‛பசங்க' கிஷோர் | அமெரிக்க வசூலில் அடுத்த சாதனை படைத்த 'அவதார் 2' |
தமிழில் மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடிக்கிறார். தற்போது நிவேதா தாமஸ் உடன் இணைந்து இவர் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடம் நாளை(செப்.,16) வெளியாக உள்ளது. இதற்காக பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டார் ரெஜினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்களையும், நூடுல்ஸ் குறித்து இரட்டை அர்த்த காமெடி வசனம் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது முதல் உதட்டு முத்தம் அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில், ‛‛ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன்'' என்கிறார் ரெஜினா.